வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc01


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > பிறரன்பும் தோழமையும்  > செய்தி


06/11/2009 14.50.27



இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இது ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும், சர்வதேச காரித்தாஸ்







நவ.06,2009 இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்நிலை ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும் என்று சர்வதேச காரித்தாஸ் மற்றும் பிற மனிதாபிமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

உலக வெப்பநிலை மாற்றம், தற்போது போதிய உணவின்றி வாடும் 100 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்கு தடங்கலாய் இருக்கினறது என்றுரைக்கும் சர்வதேச காரித்தாஸின் அண்மை அறிக்கை, இதனைத் தடுப்பதற்குத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், அடுத்த பத்தாண்டுகளில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பசிக் கொடுமையை அதிகரிக்கும் என்று கூறுகிறது.

வெப்பமண்டல மற்றும் அதற்கருகிலுள்ள நாடுகளில் 2020ம் ஆண்டு வாக்கில் வெப்பநிலை 2 முதல் 3 செல்சியுஸ் டிகிரிகள் அதிகரிக்கும் என்றும், இது, சாகுபடி நிலங்களை 40 முதல் 90 விழுக்காடு வரை தரிசு நிலங்களாக மாற்றும் என்றும் ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் சில பகுதிகள் பாலை நிலங்களாக மாறும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

2007ம் ஆண்டில் மட்டும் 7 கோடியே 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இயற்கைப் பேரிழிவுகளால் பாதிக்கப்பட்டனர்.

164 கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புகளின் கூட்டமைப்பாகிய சர்வதேச காரித்தாஸ் அலுவலகத்தில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

வருகிற டிசம்பர் 7 முதல் 18 வரை, டென்மார்க்கின் கோப்பன்ஹாகனில் நடைபெறவிருக்கும் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் அமைச்சர்கள் மற்றும்பிற அதிகாரிகளுக்கென இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. இம்மாநாட்டில் காரித்தாஸிலிருந்து ஏறத்தாழ 40 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.


  « அட்டவணைக்குச் செல்

 




07/11/2009 14.56.21
இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்



06/11/2009 14.52.35
லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கு வழங்க முன்வந்துள்ளனர்



05/11/2009 16.05.04
குடியேற்றதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையை நாடுகள் தற்சமயம் அதிகமாகக் கொண்டிருக்கின்றன, ஐ.நா.பொதுச் செயலர்



29/10/2009 15.43.13
கர்நாடகாவில் அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளைச் செய்ய இயலாத நிலை


28/10/2009 15.55.01
AIDS நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தரும் பணியில் மியான்மார் திருச்சபை



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top