வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc12


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > நீதியும் அமைதியும்  > செய்தி


06/11/2009 14.51.31



இலங்கையில் காவல்துறையினரின் வன்முறைகளைக் கண்டித்து பேரணி







நவ.06,2009 இலங்கையில் காவல்துறையினரின் வன்முறைகளைக் கண்டித்து குருக்கள், கன்னியர் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்புவில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை இவ்வாரத்தில் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 29ம் தேதி, பாம்பலபிட்டியா என்ற ஊரில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலவர்னன் சிவக்குமார் என்ற தமிழ் இளைஞனை காவல்துறை அடித்தே கொலை செய்ததைக் கண்டித்து, கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள், மனித உரிமை நடவடிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான பேர் இதில் கலந்து கொண்டனர்.

“காக்கி யூனிபார்மில் கொலைகளுக்கு எதிர்ப்பு” என்று ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அட்டைகளுடன் இந்தப் பேரணியை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட கொழும்பு ஆங்கிலிக்கன் ஆயர் துலீப் தெ சிக்கேரா, இந்த இளைஞன் கொல்லப்பட்டது குறித்து உடனடி விசாரணைகள் நடத்தப்படுமாறு அரசு அதிகாரிகளுக்கு வேண்டு கோள்விடுத்தார்.

அருட்திரு இட்டாமல்கோடா பேசுகையில், காவல்துறையின் கட்டளைகளுக்கு உடனே கீழ்ப்படியாத எவரும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கடும் எதிரியாக நோக்கப்படுகின்றார் என்றும் இத்தகைய மக்களைக் கொலை செய்வதற்கு காவல்துறையினர் இயற்கையான தூண்டுதலைக் கொண்டிருப்பது போல் தெரிகின்றது என்றும் கூறினார்.

2009ம் ஆண்டில் மட்டும் காவல்துறையின் காவலின் போது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அக்குரு தெரிவித்தார்.


  « அட்டவணைக்குச் செல்

 




10/11/2009 15.28.00
இலங்கையில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது, இலங்கை அரசு



06/11/2009 14.54.37
ஆப்கானிஸ்தானில் தமது பணியாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு வேலை செய்வோரில் 12 விழுக்காட்டினரைத் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற்றுவதாக ஐ.நா. அறிவிப்பு



05/11/2009 16.17.27
சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உலகின் மதங்கள் ஆற்றிவரும் பணிகளுக்குத் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர்


05/11/2009 16.16.28
எல் சால்வதோர் நாட்டில் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஆறு இயேசு சபையினருக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது


04/11/2009 14.55.53
இளையோரின் இசைக்குழு இந்தியாவில் வடகிழக்குப் பகுதிகளில்  சமாதானத்தைப் பரப்ப முயற்சி



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top