வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc01


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > பிறரன்பும் தோழமையும்  > செய்தி


07/11/2009 14.56.21



இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்







நவ.07,2009 இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இலங்கையின் 26 வருட உள்நாட்டுப் போர் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிய பின்னர் மெனிக் பார்ம் தடுப்பு முகாமிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையடைந்து செல்லும் தமிழ் அகதிகளில் பலர் ஆலயங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கிராமங்களைப் பார்வையிட்டுள்ள மன்னார் மறைமாவட்ட காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு பெப்பி சூசை உரைக்கையில், 99 விழுக்காட்டு வீடுகள் அழிக்கப்பட்டும் சேதமடைந்தும் உள்ளன, அவற்றில் புட்கள் முளைத்துள்ளன என்று தெரிவித்தார்.

இந்த அகதிகள், சேதமடைந்துள்ள ஆறு ஆலயங்களிலும் ஆலய வளாகங்களிலுள்ள தற்காலிக கொட்டகைகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும், இவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் திருச்சபை செய்வதற்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றும் குரு பெப்பி சூசை கூறினார்.

ஐ.நா.நிறுவனங்கள் மட்டுமே இந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வரும் வாரங்களில் ஏறத்தாழ 158,990 அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்தா போகோலகாமா (Rohitha Bogollagama) கொழும்புவில் அரசியல் தூதர்களிடம் தெரிவித்துள்ளார்.

 


  « அட்டவணைக்குச் செல்

 




11/11/2009 15.05.01
கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமான உதவிகள் செய்யப்படுவதற்கு வாழ்வுக்கு ஆதரவான நான்காவது சர்வதேச மாநாடு அழைப்பு


10/11/2009 15.27.09
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பிரான்ஸ் நாடெங்கும் மக்கள் எதிர்நோக்கும் புதுவிதமான வறுமையை அகற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் உதவ ஆயர்கள் வேண்டுகோள்



06/11/2009 14.52.35
லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கு வழங்க முன்வந்துள்ளனர்



06/11/2009 14.50.27
இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இது ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும், சர்வதேச காரித்தாஸ்



05/11/2009 16.05.04
குடியேற்றதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையை நாடுகள் தற்சமயம் அதிகமாகக் கொண்டிருக்கின்றன, ஐ.நா.பொதுச் செயலர்




தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top